"மூலிகைச் செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்"


கோவை, நவம்பர் 6: தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய தமிழக அரசு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என விவசாயி சங்கத்தினர் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. 



 இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

"தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை செடிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வறட்சி காரணமாக தமிழகத்தில் அழிந்து வந்த பல மூலிகை செடிகள் தற்போதைய பருவ மழை காரணமாக துளிர் விட்டு வரும் இந்நிலையில் அவற்றை முறையாக பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். 

மேலும், தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க 'தனி குழு' ஒன்றை அமைக்க அரசு முன்வர வேண்டும்". 

முன்னதாக, மூலிகை செடிகளை ஏந்தியவாறு விவசாயி சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...